மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதா? என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்று நோய் நிலைமைகளை சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சில பகுதிகளில் கடுமையான தனிமைப்படுத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவா் குறிப்பிட்டார்.
மாவட்டங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தேவைப்பட்டால் அது குறித்து முடிவெடுத்து உடனடியாக சுகாதார அதிகாரிகள் அறிவி்ப்பார்கள் எனவும் அவா் தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை